கலை, அறிவியல் கல்லுாரி சேர்க்கை'ஆன்லைன்' முன்பதிவு துவக்கம்



சென்னை:பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வரவுள்ள நிலையில், கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பாடத்திட்டங்களிலும், பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் முடிந்தன. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பெரும்பாலான பாடத்திட்ட மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வரவுள்ளன.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேரும் வண்ணம், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான பணிகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் சிலவற்றில், விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளன.

பெரும்பாலான கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகள் தரப்பில், பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் நாளையொட்டி, விண்ணப்பங்களை வழங்க முடிவு செய்துள்ளன. அதே நேரம், மாணவர்களின் சுய விபரங்களை ஆன்லைன் மற்றும் நேரடி முறையில், பதிவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.


அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் வழங்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு ஒரு வாரம் முன் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog