தமிழகத்தில் 22 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்




தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லையெனவும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயின்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் 2022-23 ம் கல்வியாண்டில் வரும் 13ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளை திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொடக்கக் கல்வி இயக்குனர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவியுடன் 14ம் தேதி மாணவர்கள் சேர்க்கை பேரணியை நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டன.


ஒரு மாணவரும் இல்லாத 22 பள்ளியில் 10 மாணவர்களை சேர்த்தால் 2 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள 669 பள்ளிகளிலும் இரட்டை இலக்கத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும் எனவும் தொடக்கக் கல்விததுறையில் உத்தரவிட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் 22 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவரும், ஆசிரியர்களும் இல்லாமல் உள்ளனர். 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளது தெரியவந்துள்ளது.


ஒரு மாணவர் மட்டும் 11 பள்ளிகளிலும், 2 மாணவர்கள் 24 பள்ளிகளிலும், 3 மாணவர்கள் 41 பள்ளிகளிலும், 4 மாணவர்கள் 50 பள்ளிகளிலும்,5 மாணவர்கள் 77 பள்ளிகளிலும் இருக்கின்றனர். 114 பள்ளிகளில் 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் 9 மாணவர்களும் படித்து வருகின்றனர்.


அதேபோல் 3,800 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 3,131 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு மேல் 60 மாணவர்களுக்குள் இருந்தும் தலைமை ஆசிரியர் மட்டுமே 5 வகுப்பிற்கான பாடங்களை நடத்தும் சூழ்நிலை உள்ளதாகவும், அலுவல் பணிக் காரணமாக வெளியில் சென்றால் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கும் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog