தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு 9,494 காலி பணி இடங்கள்.! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.!




அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவி ல் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்,.


மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசுப்பள்ளிகளை நோக்கி நிறைய குழந்தைகள் வர தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் LKG, UKG வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்ஆர் மூலமாகவும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடும் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் இந்த ஆண்டு 9,494 பேர் தேவைப்படுகிறது என்பதை ஆசிரியர் தேர்வாணையத்திற்குத் தெரிவித்துள்ளோம். இந்த ஆண்டு நிறைய ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.


இதையெல்லாம் கணக்கில் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படும். ரீடிங் மாரத்தான் மூலம் மாணவ, மாணவியர் பயன் பெற வேண்டும் என்பதால்தான் இதனை அறிவித்தோம். தமிழ்நாடு அரசின் இல்லம் தேடிக்கல்வித்திட்டம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது.11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும்’ என்றார். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நடைபெற்ற தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் மிகுந்த வேதனையைத் தருகின்றன. மாணவர்கள் அது போன்ற முடிவுகளை எடுக்க கூடாது என கூறினார்.

Comments

Popular posts from this blog