ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு - ஜி.கே. வாசன் எதிர்ப்பு!!



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க 'நியமனத்தேர்வு' என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இதுவரை பணி கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் . ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒன்பது ஆண்டுகள் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் . அதோடு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இவர்கள் , பணி வழங்ககோரி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .


இந்த வழக்குகள் இவர்களை பல்வேறு நிலைகளில் பாதிப்பதாக அமைந்துள்ளது . ஆகவே தமிழக அரசு அந்த வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனது தேர்தல் அறிக்கையில் 2013 - ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது . அந்த அறிவிப்பை தாமதம் இல்லாமல் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் . ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கடந்த காலங்களில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது . தற்பொழுது அவர்களின் பதிவு மூப்பு மற்றும் தேர்ச்சி மூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு படிப்படியாக பணிவழங்க வேண்டும் . தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது . ஆகவே வருங்கால மாணவர்களின் கல்வியை மனதில் கொண்டும் , தகுதியுள்ள , தகுதிப்பெற்ற ஆசிரியர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் , தமிழக அரசு உடனடியாக பணி வழங்கிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog