இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு ஒரு லட்சத்தை தாண்டியது

 


தமிழக இன்ஜினியரிங் சேர்க்கை கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.


அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அரசின் சார்பில், 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இம்மாதம், 20ம் தேதி துவங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நாள் முதல், மாணவர்கள் படிப்படியாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். 


நேற்று மாலை நிலவரப்படி, விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.அதாவது, ஒரு லட்சத்து 1,916 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்; 59 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்; 31 ஆயிரம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என, கவுன்சிலிங் குழு தெரிவித்து உள்ளது. கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, ஜூலை 19 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog