எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு 5000  சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு




சென்னை : எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு பாடம் நடத்த, 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க, பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது.



அரசின் அங்கன்வாடிகளுடன் இணைந்து செயல்படும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகளில் பாடம் நடத்துவதற்கு, தனியாக சிறப்பாசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2,381 பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை நடத்த, 5,000 ஆசிரியர்களை நியமிக்கப்பட உள்ளனர்.


முதற்கட்டமாக, 2,500 பேர் உடனடியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பள்ளிக் கல்வி துறை நடத்தும், தொடக்க கல்வி டிப்ளமா படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog