குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்ட TNPSC





டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற Group I முதன்மைத் தேர்வு முடிவுகள் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



டிஎன்பிஎஸ்சி குரூப் 1-இன் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்றைக்கு அவர்களுக்கு நேர்காணல்கள் நடந்தது. இந்த நிலையில், குரூப்-1 தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் பட்டியல் மற்றும் நேர்காணல் குறித்த விவரங்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog