ஆசிரியர் தகுதித் தேர்வு திருத்தம் செய்ய அவகாசம்




சென்னை:ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பத்தில் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ள, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது



தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில், மார்ச் 7ல் வெளியிடப்பட்டது. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க, ஏப்., 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.ஆசிரியர் தகுதித்தாள் ஒன்றுக்கு, 2.30 லட்சம் பேர்; தாள் இரண்டுக்கு 4.02 லட்சம் பேர் என, மொத்தம், 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். அதை ஏற்று, வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்.இனி வரும் காலங்களில், திருத்தம் தொடர்பாக, எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog