மாணவர்களுக்கு 15 கட்டளைகள்....! விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரை





பிறந்த நாள் என்றாலும், மாணவ, மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கட்டளைகளை, வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ளார்.


வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில், மாணவ/மாணவியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிக்கையை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ளார்.


இந்த விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.



15 கட்டளைகள் என்னென்ன....!

பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும்.


மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும்.


தலையில் எண்ணெய் வைத்து தலை வார வேண்டும்.


கை, கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலை முடியை சரியான முறையில் வெட்ட பட்டிருக்க வேண்டும்.


காலில் காலணி அணிய வேண்டும். மாணவர்கள் 'டக் இன்' செய்யும் போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.


மாணவ மாணவியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும்.


பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரின் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும்.


பள்ளிக்கு செல்லும் போது அடையாள அட்டை அணிய வேண்டும்.


மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிக்கு இருசக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு ரை அமைதி இல்லை.


வகுப்பறையில் பாடங்களை கவனமாக கவனிக்க வேண்டும். ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்க வேண்டும்


மாணவ மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது.


வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.


மாணவ/மாணவியர்கள் போதை பொருட்களை பயன்படுத்த கூடாது மற்றும் எந்த ஒரு 'TATOO' போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.


மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களின் சீருடை சட்டையிலுள்ள பொத்தான்களை கழட்ட கூடாது.


வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெறியக் கூடாது.


மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் எதுவும் அணிய கூடாது.


மாணவ மாணவியர்கள் P.T. வகுப்பின் போது பள்ளி வளாகத்துக்குள்ளேயே விளையாட வேண்டும். வெளியே செல்லுதல் கூடாது.


ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது.


Comments

Popular posts from this blog