ஜேஇஇ நுழைவு தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்: நாடு முழுவதும் 25ம் தேதி தேர்வு நடக்கிறது




ஜேஇஇ நுழைவுத் தேர்வு 25ம் தேதி நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ- மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகளையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது.


தேசிய தேர்வு முகமையின் முதுநிலை இயக்குநர்( தேர்வுகள்) டாக்டர். சாதனாபிராஷர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர் உயர் கல்விக்காக நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ஜே.இ.இ. முதன்மை நுழைவு தேர்வு-2022, கடந்த ‌ஜூன் மாதம் 24ம்தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு வருகிற 21ம்தேதி முதல் 31ம்தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த தேர்வு வருகிற 25ம் தேதி முதல் நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை தேதியை மாற்றி அறிவித்துள்ளது.


மேலும், இந்த தேர்வு நாட்டில் 500 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 17 நகரங்களிலும் நடக்கும். 6 லட்சத்து 29 ஆயிரத்து 778 ேபர்இந்த 2ம் கட்ட நுழைவுத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்வு எழுதும் மாணவ- மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள் நேற்று முதல் http://jeemain.nta.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டால், 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது jeemain@nta.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தகவல் அனுப்பலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog