குரூப் 4 தேர்வு; 84% பேர் பங்கேற்பு- டிஎன்பிஎஸ்சி




தமிழ்கத்தில் நடந்த குரூப் 4 தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,301 குரூப் 4 பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது.


குரூப் 4 தேர்வு


இந்த குரூப் 4 தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 18.50 லட்சம் பேர் தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இத்தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட 3 மணி நேரம் போதவில்லை என்றும் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். யுபிஎஸ்சி தேர்வுக்கு கேட்கப்படும் கேள்விகள் போல் மறைமுக வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.



குழப்பமான கேள்வி


திருமண உதவித் தொகை திட்டம் பற்றிய கேள்வியால் குழப்பம் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப் 4 தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.


8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது அரசால் கைவிடப்பட்ட திட்டம், செயல்பாட்டில் உள்ளது போல் கேட்கப்பட்ட கேள்வியால் தேர்வர்கள் குழப்பம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog