கலை, அறிவியல் கல்லூரியில் சேர 4 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு





தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர, முதன் முறையாக நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர், விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில், பிளஸ் 2 முடித்தவர்கள், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்றுடன் விண்ணப்பத்தை பதிவு செய்து, கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். மீண்டும் அவகாசம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



அரசு நடத்தும், 163 கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று நிறைவு பெறுகிறது. நேற்று வரை விண்ணப்ப பதிவு செய்தோர் எண்ணிக்கை நான்கு லட்சமாக உயர்ந்துள்ளது.



அவர்களில், 3.30 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பித்துள்ளனர்; அவர்களில் 2.93 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.இன்று விண்ணப்ப பதிவு முடிந்ததும், ஒவ்வொரு கல்லுாரியிலும், மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இதையடுத்து, அந்தந்த கலை, அறிவியல் கல்லுாரிகளில், சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் பட்டியல், கல்லுாரி தகவல் பலகையில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog