ஆசிரியர் தகுதி தேர்வு.. இன்றே(ஜூலை 27) கடைசி நாள்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!



ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏப்ரல் 26 வரை பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30,878 பேர், இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.



இந்நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை ஆன்லைனில் திருத்த வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப விபரங்களை இன்று (ஜூலை 27) வரை திருத்தம் செய்யலாம். விண்ணப்பதாரரின் அலைபேசி எண், இ - மெயில் முகவரி கல்வி தகுதியில் மாற்றம் செய்ய இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் ஜூலை 27ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம்.


 அதாவது இன்றே கடைசி நாள். மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு மேலும் மாற்றம் செய்யக்கூடாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog