தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்!




தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,


'தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதரப் படிப்புகளுக்கு 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் https://tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி வாரத்தின் ஏழுநாட்களிலும் (அரசு விடுமுறை நாள் உட்பட) பல்கலைக்கழக வளாகம் , விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்தூர், மதுரை, ஊட்டி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மண்டல மையங்களில் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.


மேலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைப்பிரிவு தொடர்பு எண் 044-24306664/15 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog