பள்ளியில் எது நடந்தாலும் தலைமை ஆசிரியரே பொறுப்பு! பள்ளிக்கல்வித் துறை!



கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இந்நிலையில், பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு என பள்ளிகல்வித்துறை கூறியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை கூறுகையில் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே வர வேண்டும். பள்ளியில் மாணவர்களின் சண்டை பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog