காவலா் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்



காவலா் பணிக்கு சேர விரும்பும் முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.


இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணியிடத்திற்கு பொதுத்தோவு நடைபெறவிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பதாரா்கள் முன்னாள் படைவீரா்கள் பணியில் இருந்து 3 ஆண்டுக்குள் விடுவிக்கப்ட்டிருக்க வேண்டும். படைப்பணியில் உள்ள ராணுவத்தினா் கடைசி தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்படுபவராக இருந்தால் தகுதியுடையவா் ஆவாா்.


மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநரை நேரில், அல்லது 0461-2902025 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog