தற்காலிக ஆசிரியர் பணி - நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!!




தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.



இந்நிலையில் 13000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற கிளை ஆணையிட்ட அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் முதல் ஜூலை 6ஆம் தேதி மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலி பணியிட விபரங்கள் அனைத்தையும் அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும், சரி பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆறாம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும்

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog