கலை மற்றும் அறிவியல் கல்லூரி. மாணவர் சேர்கை.! ஜூலை 27-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிப்பு.!





அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ சேர்க்கைக்காக விண்ணப்பித்தற்கான. கால அவகாசம்‌ 19.07.2022. என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ சேர்க்கைக்காக விண்ணப்பதற்கான கால அவகாசம்‌ 07.07.2022 என்றும்‌ அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்‌ வெளிவராத நிலையில்‌ அம்முடிவுகள்‌ வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்கள்‌ வரை அவர்களும்‌ விண்ணப்பிக்க கால அவகாசம்‌ வழங்கப்படும்‌ என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது, மத்திய இடைநிலை கல்வி வாரிய தேர்வு (CBSE) பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்‌ 22.07.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொறியியல்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ சமர்ப்பிக்க 27.07.2022 வரை கால அவகாசத்தினை நீடிக்க உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்.



Comments

Popular posts from this blog