TNPSC Group 4: 6 நிமிஷம் லேட்.. குரூப் 4 தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்ட 40 பேர்.. கதறி அழுத தேர்வர்கள்!




சீர்காழியில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியதால், சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் குட் சமரிட்டன் பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது.


இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தாமதமாக வந்தனர். குறிப்பாக 8.59 மணிக்குள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தேர்வர்கள் 9.05 மணிக்கு வந்தனர். தாமதமாக வந்ததால் அவர்கள் தேர்வெழுத எழுத அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வர்கள் முறையிட்டபோதும், அவர்களை அனுமதிக்க சீர்காழி வட்டாட்சியர் அனுமதி மறுத்துள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே தேர்வர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர்.


தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது என்னென்ன?


* தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

* தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.

* முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* அதிகாரிகள் சரி பார்க்கும்போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி, முகத்தைக் காட்ட வேண்டும்.

* செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை.

* கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

* சமூக இடைவெளி, சுய பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

* தெளிவாகத் தெரியும் பாட்டிலில் சொந்தமாக சானிட்டைசரைத் தேர்வர்கள் எடுத்துக்கொண்டு வர வேண்டும்.

* தேர்வுக்குப் பயன்படுத்தும் சொந்த எழுது பொருட்களை, மற்ற தேர்வர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

* முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.


தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை


* அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.

* டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.

* ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும்.


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், 6 நிமிடம் தாமதமாக வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog