8-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு




இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 8-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு அக்டோபர் 1-ம் தேதி 12 வயது 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.


மேலும் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் போது, பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 


ஏற்கெனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 10-ம் தேதி தமிழ், 11-ம் தேதி ஆங்கிலம், 12-ம் தேதி கணிதம், 13-ம் தேதி அறிவியல், 14-ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog