889 பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்




889 பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வுக்கு தகுதியுடையோர் இன்று முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று எம்ஆர்பி தெரிவித்துள்ளது.


தமிழக அரசின் மருத்துவ பணியில் 889 பார்மஸ்சிஸ்ட் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியுடையோர் www.mrb.tn.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழி அடிப்படையில் நடைபெறும். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 1.7.2019 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57க்குள் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், டிப்ளமோ முடித்திருப்பவர்கள் சான்றிதழை தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து புதுப்பித்து பதிவை வைத்திருக்க வேண்டும். மருந்தாளுநர்களுக்கு சம்பளம் ரூ.35,400-ரூ.1,12,400 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய அறிவுரைகள் http://www.mrb.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog