இன்று முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு




இன்று முதல் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு நடைபெற உள்ளது.



தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். கல்லூரி கல்வி இயக்ககம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.


இந்த மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்த மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெற உள்ளதாகக் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog