கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீடிப்பு



உதகை கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: 2022 -23ம்ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு (முழுநேரம்) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பம் பெற கோயம்புத்தூரில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் சென்று ரூ.100 செலுத்தி செப்.5ம் தேதி வரை விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வரும் செப்.7ம் தேதி மாலை 5.30 மணி வரை முதல்வர் ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சாய்பாபா காலனி, கோவை என்ற முகவரிக்கு கொரியார் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0422 - 2442186 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments

Popular posts from this blog