10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. அசல் மதிப்பெண் சான்றிதழ்... வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!



தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வுகள் நடந்து முடிந்தன.


அதன்பிறகு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டது.


இந்நிலையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அதாவது மதிப்பெண் பட்டியல்களை அக்டோபர் 31ஆம் தேதி முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog