கணக்கு அதிகாரி பணிக்கு இன்று தேர்வு



தமிழக கருவூல மற்றும் கணக்கு துறையில், மூன்றாம் நிலை கணக்கு அதிகாரி பணியில், 23 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு அறிவிக்கப்பட்டது.இதற்கு, 479 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு, இன்று காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படுகிறது.


சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு அளவில் தமிழ் மொழி தகுதி தேர்வு, பொது படிப்புகளுக்கான பிரிவு, முதுநிலையில் கணக்கு பதிவியல் பாடம் தொடர்பான வினாக்கள், தேர்வில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது..

Comments

Popular posts from this blog