சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் சமூக நலத்துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) பதவிக்கான எழுத்து தேர்வு (கணினி வழி தேர்வு) வருகிற 5ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த கணினி வழி தேர்வு நிர்வாக காரணங்களால் தற்பொழுது சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு நாளன்று நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog