பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்



கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் வரும் 22ம் தேதி பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.


கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்துகின்றனர்.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் 22ம் தேதி காலை 9:00 மணியளவில் நடக்கிறது.



தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்கள் 2020, 2021 மற்றும் 2022ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 20 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக 16 ஆயிரத்து 557 ரூபாயும், உணவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

Comments

Popular posts from this blog