டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவு; உத்தேச அறிக்கை வெளியீடு




 : டி.என்.பி.எஸ்.சி., நடத்தியுள்ள, 12 வகை தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என, உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளின் முடிவுகள், எப்போது வெளியிடப்படும் என்ற உத்தேச அறிக்கை, ஒவ்வொரு மாதமும், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.


இந்த வகையில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தியுள்ள, 12 வகை போட்டி தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உத்தேச விபரம், நேற்று வெளியிடப்பட்டது. 


இதன்படி, குரூப் - 2 முதல் நிலை தகுதி தேர்வு முடிவு இந்த மாதமும், குரூப் - 4 தேர்வு முடிவு டிசம்பரிலும் வெளியிடப்படும். 


உதவி குற்றவியல் வழக்கறிஞர் பதவிக்கான தேர்வு, இன்ஜினியரிங் பதவிகளுக்கான தேர்வு ஆகியவற்றின் முடிவுகள், இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog