''டெட்' தேர்வு முதல் தாள் நிறைவு.இரண்டாம் தாள் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.







ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின், முதல் தாள் தேர்வு நிறைவு பெற்றது.



தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிய, 'டெட்' என்ற தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. 


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில், பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, டெட் முதல் தாள் தேர்வு, கடந்த 14ம் தேதி துவங்கியது; நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது.


இந்த தேர்வுக்கு, 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். 


இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆன்லைனில் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு, தேர்வர்கள் தயார் செய்யப்பட்டனர். 


தேர்வில் இடம் பெற்ற வினாத்தாள் சில பிரிவுகளில் எளிமையாகவும், சில பிரிவுகளில் கடினமாகவும் இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். டெட் இரண்டாம் தாள் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


Comments

Popular posts from this blog