மிக அவரசம்.. மாணவர்கள் மற்றும் ஆசிரியர் விவரங்கள் தேவை - ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பறந்த கடிதம்..




ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் விவரங்களை அனுப்புமாறு , அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கேட்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணக்கர்கள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மற்றும் 9 முதல் 10-ம் வகுப்பு வரை எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட பாட வாரியான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் பாட வாரியான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.


 


18.10.2022 அன்றைய நிலையிலான பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள் தங்களது G-Mail முகவரிக்கு Google Form தயார் செய்து அனுப்பப்பட்டுள்ள அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபாடு இல்லாமல் முழுமையாக பூர்த்தி செய்து 20.10.2022 மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் அவசரம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog