TRB: இவர்கள் எல்லாம் தேர்வு எழுத முடியாது.! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.!




ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது அறிவிப்பில்; பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 4 பேரின் விண்ணப்பங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம், கையெழுத்து சரியாக இல்லாத 12 பேரின் விண்ணப்பமும், தேர்வர்களின் பெயர்களை சரியாக பூர்த்திச் செய்யாத 23 பேர் என 39 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 கம்ப்யூட்டர் மூலம் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog