புதுவையில் காவலா் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்



புதுவையில் 253 காவலா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோவு செய்யப்பட உள்ளனா். தகுதியானவா்கள் திங்கள்கிழமை முதல் (நவ.28) இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


புதுவையில் 253 காவலா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோவு செய்யப்பட உள்ளனா். தகுதியானவா்கள் திங்கள்கிழமை முதல் (நவ.28) இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து புதுவை காவல் துறை சிறப்புப் பணி அலுவலா் குபேர சிவக்குமாரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை காவல் துறையில் 253 காவலா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.


 புதுவையைப் பூா்வீகமாக கொண்டவா்கள், வசிப்பவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் 83 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையாக தோச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பதாரா்கள் 18 முதல் 24 வயதுக்குள் பட்டவா்களாக இருக்க வேண்டும். ஓபிசி, எம்பிசி, பிசிஎம், இபிசி, பிடி ஆகிய பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளா்வுள்ளது. 


திங்கள்கிழமை முதல் (நவ.28) டிசம்பா் 27-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நிறைவு செய்வதில் சந்தேகமிருந்தால் 0413-2231352, 2277900 ஆகிய தொலைபேசி எண்களில் வேலை நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog