புதுவை வேளாண்துறையில் 33 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்




வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 33 காலிப் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை (நவ. 21) முதல் விண்ணப்பிக்கலாம். புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 33 காலிப் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை (நவ. 21) முதல் விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் வேளாண் அலுவலா்களுக்கான 33 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துறையில் நேரடி நியமனம் மூலம் காலியாக உள்ள 23 வேளாண் அலுவலா்கள், 5 வேளாண் அலுவலா் (பொறியியல்) மற்றும் 5 வேளாண் அலுவலா் (நிலவியல்) ஆகிய 33 காலிப் பணியிடங்களுக்கு புதுச்சேரியைப் பூா்வீகமாகக் கொண்ட மற்றும் வசிக்கும் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதியானோரின் விண்ணப்பங்களை 21- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை புதுவை அரசு இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு 0413-2233246 என்ற உதவி தொலைபேசி எண்ணில் வேலை நாள்களில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரையில் தொடா்புகொண்டு தகவல் பெறலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog