67 லட்சம் பேர் தமிழக அரசு வேலைக்கான காத்திருப்பு பட்டியலில்... வெளியான முழு விவரம்....



தமிழகத்தில் 67 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக அரசு அறிவித்துளளது.


தமிழகம் முழுவதும் 67 லட்சத்து 23 ஆயிரத்து 682பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அக்-31,2022 வரையிலான தரவின்படி தமிழகத்தில் மொத்தம் 67,23,682 பேர் அரசு வேலைக்கு பதிவுசெய்து காத்திருக்கின்றனர்.


இதில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882பேர் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 268 பேர் என அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். மேலும் 18 வயதிற்குள் உள்ள மாணவர்கள் 18 லட்சத்து 48 ஆயிரத்து 279 பேர், 18-30 வயதிற்குள் உள்ளவர்கள் 28 லட்சத்து 9 ஆயிரத்து 415 பேர், 30-45 வயதிற்குள் உள்ளவர்கள் 18 லட்சத்து 30 ஆயிரத்து 76 பேர், 45-60 வயதிற்குள் உள்ளவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 310 பேர், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,602 பேர் பதிவு செய்துள்ளனர்.


மேலும் மாற்றுத்திறனாளிகள் 1லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்று அந்த அறிவிப்பில் வெளியானது.

Comments

Popular posts from this blog