தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு - புதிய தேதி அறிவிப்பு!!



கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுத இருந்த நிலையில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இந்த மாதம் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog