விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு



விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் யசோதாதேவி செய்திக்குறிப்பு;கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையானகூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 244 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.


விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு வரும் டிச., 12 முதல் 23ம் தேதி வரை விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் வடக்குச்சிப்பாளையம் ஏ.ஆர்., பொறியியல் கல்லுாரியில் நடைபெற உள்ளது.நேர்முகத்தேர்விற்கான அனுமதிச்சீட்டு நேற்று 28ம் தேதி முதல் விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drbvpm.in/hallticket.php என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை 04146 -229854 மற்றும் drpdsvpm@gmail.com என்ற இ மெயிலில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog