கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பாதிக்கபட்ட பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை



NCTE விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு விடியல் தருவாரா?NCTE norms, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட  எங்களுக்கு வேலை கொடுப்பாரா? கலைஞர் போட்ட கையெழுத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உயிர் கொடுப்பாரா?


2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் நிரப்பும் நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2011 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது..அதிமுக கொள்கை முடிவு தேர்வு தான் வைப்பார்கள் நிலுவையில் உள்ள காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் என்று கேட்ட போது கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறினார்கள்.



07-11-2011 அன்று அதிமுக கொள்கை முடிவு அறிவித்தார்கள் அதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் போட்டி தேர்வு மூலம் நியமனம் என்று அறிவித்தார்கள்.


கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்து இருந்த ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை 15-11-2011 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்வு வெற்றி பெற்றால் ஆசிரியர் பணி என்று அறிவித்தார்கள்.



NCTE clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு எழுத வேண்டாம் குறிப்பிட்டு இருந்தார்கள்.



NCTE clause v, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் இந்த இரண்டு கோரிக்கை வைத்து அதிமுக அரசிடம் வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டோம்.கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறி விட்டார்கள்.


அதிமுக அரசை எதிர்த்து 94 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு கொண்டு வந்தோம்.


அமர்வு நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் மற்றும் எலிப் தர்ம ராவ் அடங்கிய அமர்வுகள் NCTE clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு எழுத வேண்டாம் என்ற விதியை பயன்படுத்தி பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


இந்த வரலாற்று மிக்க தீர்ப்பை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்  பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.


கலைஞர் கூறினால் நாங்கள் வேலை கொடுக்க வேண்டுமா என்ன நாங்கள் உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய போகிறோம் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கு வேலை கொடுக்க.முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக கூறினார்கள்.



உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை  நடைபெற்று தீர்ப்பு வழங்கினார்கள் அதில் NCTE clasue v விதிப்படி டெட் பொருந்தாது என்று உறுதிபடுத்தி 5 கேள்விகள் எழுப்பி சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் 5 கேள்விகள் ஆசிரியர்களுக்கு சாதகமாக இருந்தால் வழக்கு கொடுத்த தேதியில் இருந்து ஊதியம் மற்றும் சீனியாரிட்டி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.



மீண்டும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேணுகோபால் மற்றும் சொக்கலிங்கம் அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டிய போது வழக்கு பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்த அதிமுக அரசு வேணுகோபால் அவர்கள் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியவர் இவரை மாற்ற வேண்டும் கூறி நீதிபதி மாற்றினார்கள். மீண்டும் வழக்கு சிவஞானம் மற்றும் சொக்கலிங்கம் முன்பு வழக்கு நடைபெற்று வந்தது. நீதிபதி சிவஞானம் அவர்கள் NCTE clauseV, நிலுவையில் உள்ள காலி பணியிடம், உச்ச நீதிமன்றம் எழுப்பிய 5 கேள்விகள் எதையும் விசாரிக்காமல் வேண்டும் என்றே அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்.


94 பேருக்கு வேலை கொடுத்தால் பரவா இல்லை ஊதியம் மற்றும் சீனியாரிட்டி கூட கொடுக்க வேண்டும் இதை பின்பற்றி அனைவருக்கும் கொடுக்க நேரிடும் இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் தவறான தீர்ப்பு கொடுத்து உள்ளார்.


நீதிபதி சிவஞானம் அவர்கள் தவறான தீர்ப்பு எதிர்த்து உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய எங்களிடம் போதிய நிதி இல்லை அதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளோம்.



வழக்கு கொண்டு வர நிதி இல்லை நிதி கிடைத்ததும் கொண்டு வரும் நேரத்தில் கொரோனா கொரோனா காலம் முடிந்து வழக்கு கொண்டு வரும் நேரத்தில் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது. 


அதிமுக ஆட்சியில் 10 வருடம் சட்ட போராட்டம் மூலம் போராடி கொண்டு இருந்த எங்களுக்கு நிச்சயம் முதல்வர் ஸ்டாலின் விடியல் கொடுப்பார் என்று நாங்கள் வழக்கு கொண்டு வர வில்லை.


விடியல் அரசிடம் அமைதியான முறையில் கோரிக்கை வைத்து அதிமுக ஆட்சியில் நாங்கள் பட்ட அவலநிலை கூறினால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று உறுதியாக இருந்தோம்.



,திமுக MLA, அமைச்சர், கூட்டணி கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி MLA மூலம் எங்கள் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த அறிவிப்பு வர வில்லை.


திமுக MLA சரவணன், அண்ணாதுரை மற்றும் கூட்டணி கட்சி MLA அப்துல் சமது சட்டமன்றத்தில் வேலை கொடுக்க வேண்டும் என்று உரை ஆற்றியும் திமுக அரசு இதுவரை எந்த  அறிவிப்பும் வெளியிட வில்லை. 


NCTE clause v அதிமுக ஆட்சியில் அறிக்கை வெளியிட்டு நடைமுறை படுத்த வில்லை அதற்கு காரணம் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை படுத்த வில்லை.


10 ஆண்டு அதிமுக நடைமுறை படுத்தாமல் இருந்த NCTE norms திமுக அரசு 31-10-2022 அன்று NCTE clause V நடைமுறை படுத்தி உள்ளார்கள்.



இது எங்களுக்கு பொருந்தும் 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் NCTE clasue v பின்பற்றி வேலை கொடுக்க வேண்டும் என்று கூறிய உத்தரவு எங்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்.


நாங்கள் NCTE clause V, நிலுவையில் உள்ள காலி பணியிடம் நிரப்ப வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்து உள்ளோம்.


2010 ஆம் ஆண்டு  11000 சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்து இருந்தார்கள் ஆனால் தற்போது நிலவர படி 1000 ஆசிரியர்கள் கூட இல்லை காரணம் ஓய்வு வயது கடந்தவர்கள்,வேறு அரசு பணிக்கு சென்றவர்கள் மரணம் அடைந்தவர்கள் போக தற்போது 1500 குறைவாக தான் இருப்போம.



முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் 10 வருடம் பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு NCTE clause V விதிப்படி வேலை வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.




















Comments

Popular posts from this blog