10, 12 பொதுத்தேர்வுக்கு ஆன்லைனில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


தமிழ்நாட்டில் 2023 மார்ச், மாதங்களில் நடைபெறவுள்ள 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விரும்புவோர் டிசம்பர் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


அரசு தேர்வுகள் துறையின் இணையதளமான dge.1.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதுதவிர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக மையத்திலும் தனித் தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


பள்ளிகளில் படிக்கும் மற்ற மாணவர்கள் அந்தத்த பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog