சி.பி.எஸ்.இ 10 & 12 ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்.!



மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சிபிஎஸ்இ தேர்வுகள் பிப்ரவரி மாதம் 2023ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காலையில் 10:30 மணிக்கு தொடங்கும் தேர்வுகள் மதியம் 01:30 வரையில் நடைபெறும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மாதம் 15ல் தொடங்கி, மார்ச் மாதம் 23ல் நிறைவு பெரும் வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

Comments

Popular posts from this blog