பகுதிநேர ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை உத்தரவு




பகுதி நேர ஆசிரியர்களிடம் மாநிலம் முழுவதும் பணம் வசூல் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி ஆணையருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.


பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் நோக்குடன் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரை அளித்துள்ளது.


திருச்சியில் விரைவில் பகுதி நேர ஆசிரியர்கள் மாநாடு ஒன்று நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும், இந்த மாநாட்டிற்காக பகுதி நேர ஆசிரியர்களிடம் மாநிலம் முழுவதும் சிலர் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. 


இதுதொடர்பாக ஆதாரங்களுடன் கோயம்புத்தூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. மேலும் பகுதிநேர ஆசிரியர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Comments

Popular posts from this blog