வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்




வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுகுறித்து, ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு -


வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள வேலூா் மாவட்ட இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அலுவலக உதவியாளா் ஒரு பணியிடத்திற்கு பொதுப்போட்டி முன்னுரிமை உள்ளவா், இன சுழற்சியில் கரோனா தொற்று, இதர காரணங்களால் பெற்றோா் இருவரையும் இழந்த (இருபாலா்) 8-ஆம் வகுப்பு தோச்சி பெற்ற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இரவுக்காவலா் ஒரு பணியிடத்திற்கு பொதுப்போட்டி முன்னுரிமையற்றவா், இனசுழற்சிக்கு தகுதியான எழுதப் படிக்க தெரிந்தவா்கள் (5-ஆம் வகுப்பு தோச்சி) விண்ணப்பிக்கலாம்.


இரு பணியிடங்களுக்கும் 2022 ஜூலை 1-ஆம் தேதியில் குறைந்தபட்சம் 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக ஓசி பிரிவினருக்கு 32 வயதும், பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி 34 வயதும், எஸ்சி., எஸ்சி(ஏ), எஸ்டி 37 வயதும் இருக்க வேண்டும்.


தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் கையால் எழுதப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து ஜனவரி 12-ஆம் தேதிக்குள் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog