TNPSC : 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!




காலியாக உள்ள 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


வரும் ஜனவரி 13ஆம் தேதி வரைப் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முதல் நிலை தேர்வு ஏப்ரல் 9ஆம் தேதி தமிழகத்தில் சென்னை,கோவை,திருச்சி,சேலம்,மதுரை உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறுகிறது


முதன்மை தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது


முதல் நிலை தேர்வில் தமிழ் மொழி பிரிவில் 40 மதிப்பெண்கள் தகுதி பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, பணியிடங்களுக்கு தேர்வர்கள் இன்று (14.12.2022) முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 9ஆம் தேதி போட்டி தேர்வு நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog