குரூப் V-A எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு



கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.


இந்த ஆண்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.


 

இந்நிலையில், 'தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்துத் தேர்வு டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog