வரும் 24-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.! 40,000 காலியிடங்கள்.! முழு விவரம் உள்ளே.!



தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, மாவட்ட நிர்வாகம்‌, மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மற்றும்‌ தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம்‌ (மகளிர்‌ திட்டம்‌) இணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌,


 வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ 24.01.2023 அன்று நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய்‌ வித்யாலயா பெண்கள்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெறவுள்ளது.


இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்‌ நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு,மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளில்‌ இருந்து 300-க்கும்‌ மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும்‌ நிறுவனங்கள்‌ 40,000ற்கும்‌ மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்‌.


 மேலும்‌, இம்முகாமில்‌ 20,000ற்கும்‌ மேற்பட்ட வேலைநாடுநர்களும்‌ கலந்து கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.


காலை 8.00 மணி முதல்‌ மாலை 4.00 மணிவரை நடைபெறவிருக்கும்‌ இம்முகாமில்‌ 8ஆம்வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல்‌, செவிலியர்‌, ஆசிரியர்‌, தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌.


 இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும்‌ நிறுவனங்களும்‌, வேலைநாடுநர்களும்‌ www.tnprivatejobs.tn.gob.in என்ற இணையதளத்தில்‌ பதிவு செய்ய வேண்டும்.


மேலும்‌ விவரங்களுக்கு, dpijobfair2023@gmail.com என்ற மின்னஞ்சல்‌ வாயிலாகவும்‌ மற்றும்‌ 04342-296188 என்ற தொலைபேசி எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்.



Comments

Popular posts from this blog