கலைஞர் ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் 





தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று(29-01-2023) நடைபெற்றது. 


 மாநில தலைவர் ரத்தினகுமார்,  மாநில பொருளாளர் அய்யாதுரை  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு 70  இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய மாநில தலைவர் கி. இரத்தினகுமார் அவர்கள் கடந்த 2010 ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் பணி நியமனம் பெற்றவர்கள்  போக, மீதமுள்ள 2000 பி. எட். பட்டதாரிகள் மற்றும் 1500 இடைநிலை ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்க வேண்டும். 


 


தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் உத்தரவின்ப்படி 23-08-2010 முன் நியமன நடவடிக்கை துவங்கியவர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளித்து, அவர்களை பணி நியமனம் செய்யவேண்டும், சென்னை அமர்வு  நீதிமன்றம் NCTE norms படி டெட் தேர்வு பொருந்தாது பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்ற வேண்டும் மற்றும் கலைஞர் அவர்கள் பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்து உள்ளார். முதல்வர் அவர்கள் எங்கள் கோரிக்கை ஏற்று 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியால் பழிவாங்க பட்ட எங்களுக்கு விடியல் தர வேண்டும்  என எடுத்துரைத்தார்.







Comments

Popular posts from this blog