மத்திய பணியாளர் தேர்வாணையம் காலிப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்




விழுப்புரம் : மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு;மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 12,523 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வரும் 17ம் தேதி கடைசி தேதியாகும்.


இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 1.1.2023 அன்றைய நிலையில் எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதிற்குள்ளும், பொது பிரிவினர் 25 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 


தேர்வுக் கட்டணம் 100 ரூபாய். இதில், பெண்கள், எஸ்.சி.,-எஸ்.டி., வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது. 


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 1.2.2023 அன்று காலை 10:00 மணியளவில் இலவசப் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. 


இது தொடர்பான விவரங்களுக்கு 04146 226417 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 9499055906 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog