மே மாத நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஜனவரியில் தொடக்கம்?




நாடு முழுவதும் உள்ள மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்ற ஒரே தேர்வை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


இதற்கு முன்னர் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நுழைவுத்தேர்வுகளை மேற்கொண்டன. ஆனால் தற்போது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வு மூலம் மட்மே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


இந்த ஆண்டு வருகின்ற மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த முறையான தகவல்கள் இல்லை. இந்நிலையில், நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இந்த மாதமே பதிவேற்றம் செய்யலாம் என்ற அறிவிப்பு தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.


விண்ணப்ப தேதி வெளியிடப்பட்டவுடன் தேர்வுகள் www.nta.ac.in மற்றும் www.neet.nta.nic.in என்ற இணையதள பக்கங்களில் சென்று விண்ணப்பங்களை பதிவேற்றும் செய்யலாம்.

Comments

Popular posts from this blog