11, 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 28-ல் நுழைவு சீட்டு….. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…..!!



தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (private candidates) தேர்வு கூட அனுமதி சீட்டுகளை (admit card/ hall ticket) வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 


பிளஸ் ஒன் (அரியர்), பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவு சீட்டு வழங்கப்படும். 


பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அதில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog