போட்டி தேர்வுக்கு எதிராக 17 முதல் போராட்டம்



ஆசிரியர் பதவிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 17ம் தேதி முதல், சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வுடன், போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.



ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், இந்த போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற நான்கு லட்சம் பேர், ஆசிரியர் பணிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். 


இவர்கள், புதிதாக நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஏற்கனவே தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து, பணி நியமனம் மேற்கொள்ள வலியுறுத்தியும், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், வரும் 17ம் தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளனர்.

Comments

Popular posts from this blog