ஆசிரியர் தகுதி மறுதேர்வுக்கு எதிராக போராட்டிய 500க்கும் மேற்பட்டோர் கைது..!!



தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மறு தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அரசாணை எண்.149 வெளியிட்டது.


இதற்கு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும், பணி நியமனம் வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.


 


இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனால் வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்பொழுது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முற்பட்ட பொழுது கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் வள்ளுவர் கோட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog